தமிழ்நாடு

300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்: பியூஷ் கோயல்

DIN


மதுரை: நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தார். 

மதுரையில் பாஜக நிர்வாகிகளுடன் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக மதுரை வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விரைவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. பாஜக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார். 

மேலும், பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள் என்றும், மோடியை மீண்டும் பிரதமராக்கும் நோக்குடன் கூட்டணி தலைவர்கள் பாடுபடுவார்கள் என கேயல் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் வாக்குப் பதிவு இயந்திர அறையின் சிசிடிவி செயலிழப்பு: நீலகிரி ஆட்சியர் விளக்கம்

உயிருக்குப் போராடிய குழந்தை மீட்பு!

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

SCROLL FOR NEXT