தமிழ்நாடு

வால்பாறையில் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி

DIN

வால்பாறைக்கு மணல் ஏற்றி வந்த லாரி மலைப் பாதையில் இருந்து 100 அடி பள்ளத்தில் கவிழந்து சனிக்கிழமை விபத்தில் சிக்கியது.
 கோவை மாவட்டம், வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் சாலையைப் புதுப்பிக்கும் பணி மற்றும் சாலையோரம் தடுப்புச் சுவர்கள் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிக்காக லாரிகள் மூலம் மணல் கொண்டு வரப்படுகிறது.
 இந்நிலையில், சனிக்கிழமை காலை மணல் ஏற்றி வந்து கொண்டிருந்த ஒரு லாரி, கவர்க்கல் எஸ்டேட் சாலையோரம் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் கணேசன் (26) காயத்துடன் உயிர் தப்பினார். இச் சம்பவம் தொடர்பாக, வாட்டர்பால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT