சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அமமுகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.
அசோக் நகரில் கட்சி அலுவலகத்தில் இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்ட டிடிவி தினகரன், அதன் முக்கிய அம்சங்களை வாசித்தார்.
அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அனைத்து விவசாயக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
- ஜிஎஸ்டி கவுன்சிலில் உரிய மாற்றங்கள் செய்யப்படும்.
- டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்.
- கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து சிறு வணிகக் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.
- தமிழகத்துக்கு என தனி செயற்கைக் கோள் ஏவப்படும்.
- ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் கைவிடப்படும் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை டிடிவி தினகரன் வாசித்தார்.