தமிழ்நாடு

ராகுல் மீண்டும் பிரசாரத்துக்கு வருகிறார்: சு.திருநாவுக்கரசர் 

DIN

மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்காக ராகுல் காந்தி மீண்டும் தமிழகம் வர உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெறும். திருச்சியில் போட்டியிட எனக்கு ராகுல் காந்தி வாய்ப்பு கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி. 
நாட்டு மக்களுக்காக மோடி எதுவும் செய்யவில்லை. அவர் மீது மக்களுக்கு வெறுப்புதான் அதிகம் உள்ளது.  மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி. ராகுல் காந்தி பிரதமராவார். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் மீண்டும் தமிழகத்தில் பிரசாரம் செய்ய  வர உள்ளார். தமிழகத்தில் பிரியங்கா பிரசாரம் செய்ய வருவது பற்றி ராகுல்தான் முடிவு செய்வார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT