தமிழ்நாடு

மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டி

DIN


மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

17-ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றுள்ளது. மதிமுகவுக்கு ஈரோடு மக்களவைத் தொகுதியும், ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி எந்த சின்னத்தில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், கணேசமூர்த்தி தேர்தல் அதிகாரி ஒதுக்கும் தனி சின்னத்திலேயே போட்டியிடுவார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார். 

எனினும், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது. 

இந்த நிலையில் ஈரோடு மொடக்குறிச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது, உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடுவதாக மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி அறிவித்தார். 

ஏற்கனவே, ஐஜேகே, விடுதலைச் சிறுத்தைகள் (ஒரு தொகுதி), கொமதேக ஆகிய கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT