தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசியத் தலைவர்கள் பிரசாரம்

DIN

மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத் மற்றும் பிருந்தா காரத் ஆகியோர் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
 மார்க்சிஸ்ட் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்துப் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது பிரசார பயண விவரம்:
சீதாராம் யெச்சூரி ஏப்ரல் 8-இல் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி,  ஏப்ரல் 9-இல் மதுரை, ஏப்ரல் 10-இல் கோவை, திருப்பூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
பிரகாஷ் காரத் ஏப்ரல் 8-இல் நாகப்பட்டினம், ஏப்ரல் 14-இல் கோவை  ஆகிய தொகுதிகளிலும், பிருந்தா காரத் ஏப்ரல் 5-இல் மதுரை, ஏப்ரல் 6-இல் கோவையிலும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT