உதகையில் தென்னிந்திய கென்னல் கிளப் சார்பில் 3 நாள்கள் நடைபெறும் நாய் கண்காட்சி, அரசினர் கலைக் கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இதில் ஜெர்மன் ஷெப்பர்டு, லேப்ரடார், செயின்ட் பெர்னார்டு, டாபர்மேன் உள்ளிட்ட பல்வேறு ரகங்களில் 310 நாய்கள் பங்கேற்கின்றன. முதல் நாளான வெள்ளிக்கிழமை நாய்களுக்கான கீழ்படிதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் காவல் துறை, ரயில்வே காவல் துறை, தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் சார்பிலான நாய்கள் பங்கேற்றன.