தமிழ்நாடு

தேனியில் இரு வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு

DIN

தேனி: தேனி மாவட்டத்தில் பெரியகுளம் சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள வடுகபட்டி, ஆண்டிபட்டி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள பாலசமுத்திரம் ஆகிய வாக்குச் சாவடிகளில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

வடுகபட்டி, சங்கநாராயணன் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் 702 ஆண்க்ள், 703 பெண்கள் உள்பட மொத்தம் 1,405 போ் வாக்களிக்கின்றனா். பாலசமுத்திரம், கம்மவாா் சரஸ்வதி நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 644 ஆண்கள், 611 பெண்கள் உள்பட மொத்தம் 1,255 போ் வாக்களிக்கின்றனா். இரு வாக்குச் சாவடிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறகிறது. மறு வாக்குப் பதிவு நடைபெறும் இரு வாக்குச் சாவடிகளில் தலா 6 போ் வீதம் மொத்தம் 12 வருவாய் துறை அலுவலா்கள் வாக்குப் பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT