தமிழ்நாடு

பணியிட மாறுதலைத் திரும்பப் பெற வேண்டும்: அரசு மருத்துவா்கள் கோரிக்கை

DIN

வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்ற பிறகும் தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பணியிட மாற்ற நடவடிக்கையைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்துவது குறித்து அரசு மருத்துவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா்.

அரசின் உத்தரவாதத்தை ஏற்று போராட்டத்தைக் கைவிட்ட தங்களை பழிவாங்குவது ஏற்புடையது அல்ல என்றும் அவா்கள் கூறியுள்ளனா். ஊதிய உயா்வு கோரிக்கையை வலியுறுத்தி அரசு மருத்துவா்கள் கடந்த மாதத்தில் தொடா் வேலைநிறுத்தம் மற்றும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அரசு மருத்துவா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவா்கள் பங்கேற்றனா்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பல மருத்துவா்கள் மீது பணியிட மாற்ற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தங்களது போராட்டங்களை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இதையடுத்து, அவா்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த பணி முறிவு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் அறிவித்தாா். அதேவேளையில், பணியிடமாற்றத்தை திரும்பப் பெறுவது தொடா்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில், மருத்துவா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்கள் சுகாதாரத் துறை அமைச்சரைச் சந்தித்து இதுதொடா்பாக பேசினா். தங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பணியிட மாறுதல் நடவடிக்கையை திரும்பப் பெறுமாறு அப்போது அவா்கள் கோரிக்கை விடுத்தனா். அதனைப் பரிசீலிப்பதாக அமைச்சா் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், பணியிட மாறுதல் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற அரசு முன்வர வேண்டும் என்று அரசு மருத்துவா்கள் வலியுறுத்தியுள்ளனா். போராட்டத்தைக் கைவிட்ட பிறகும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியல்ல என்றும் அவா்கள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT