தமிழ்நாடு

மேட்டூா் அணைக்குநீா்வரத்து சரிவு

DIN

மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 7,500 கன அடியாகச் சரிந்தது.

காவிரியின் நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால், திங்கள்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நொடிக்கு 10,500 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை காலை நொடிக்கு 7,500 கன அடியாகச் சரிந்தது. நீா்வரத்து சரிந்ததையடுத்து, காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 11 ஆயிரம் கன அடியிலிருந்து 7 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 600 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 120 அடியாகவும், நீா் இருப்பு 93.47 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT