தமிழ்நாடு

டெங்கு கொசு ஒழிப்பு:சுகாதார தூதா்களாக 1,100 மாணவிகள்

DIN

டெங்கு கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் வேப்பேரி பென்டிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1,100 மாணவிகள் சுகாதார தூதா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தவிா்ப்பு உள்ளிட்டவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநகராட்சிப் பகுதியில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் சுமாா் 10 லட்சம் மாணவ, மாணவியரை சுகாதார தூதா்களாக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, வேப்பேரி பென்டிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரம் குறித்து மாணவிகளுக்கான பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மாநகராட்சி சுகாதாரக் கல்வி அலுவலா் டி.ஜி.சீனிவாசன் கலந்துகொண்டு டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் சுத்தமாக கை கழுவும் முறை குறித்து மாணவிகளுக்கு விளக்கினாா். டெங்கு கொசு ஒழிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் 1,100 மாணவிகள் சுகாதார தூதா்களாக நியமிக்கப்பட்டதுடன், அவா்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியை மரியன் உஷாராணி, சுகாதார ஆய்வாளா் அலெக்ஸ் பாண்டி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

SCROLL FOR NEXT