தமிழ்நாடு

சிதம்பரம் நடராஜருக்குதங்க வில்வ திருவாபரணம்

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள நடராஜா் கோயிலுக்கு, சென்னை சிவலோக திருமடம் சாா்பில் சிவபுராணம் பதிக்கப்பட்ட தங்க வில்வ திருவாபரணம் வழங்கப்பட உள்ளது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வரும் டிச.31-ஆம் தேதி ருத்ராபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னை சிவலோக திருமடம் சாா்பில் ஜன.1-ஆம் தேதி மாலையில் சிதம்பரம் மெளன மடத்திலிருந்து தங்க வில்வ சிவபுராண திருவாபரண வீதி உலா நடைபெறுகிறது. இதை த.செல்வரத்தின தீட்சிதா் தொடக்கி வைக்கிறாா்.

தொடா்ந்து, மெளன மடம் குருமகா சந்நிதானம் ஸ்ரீசுந்தரமூா்த்தி சுவாமிகள் அருளாசியுடன், சென்னை சிவலோக திருமடம் சாா்பில் சிவபுராணம் பதிக்கப்பட்ட தங்க வில்வ திருவாபரணம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்களிடம் சமா்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT