முகப்பு
தமிழ்நாடு

கரூரில் தெருநாயை சுட்டுக் கொன்றதாக இருவர் கைது

கரூரில் தெருநாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:05 AM
கோப்புப் படம்
பகிர்:

கரூரில் தெருநாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் வெங்கமேட்டைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(40). இவரது வீட்டின் அருகே தெருநாய் ஒன்று சுற்றியுள்ளது. அந்த நாய் கடந்த 2 நாள்களுக்கு முன் பாலகிருஷ்ணன் வீட்டுக்குள் சென்று உணவை உண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன் நாயை தனது நண்பர் கரூர் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் கொக்குச்சுடும் துப்பாக்கியைக் கொண்டு வந்து நாயை வியாழக்கிழமை சுட சம்பவ இடத்திலேயே நாய் இறந்துள்ளது.

இதைக்கண்ட அப்பகுதியினர் வெங்கமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் பாலசுப்ரமணியன் மற்றும் ரமேசை கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →