ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நீட் என்பது கல்வி சார்ந்த விஷயம்; எனவே படித்து முன்னேற வேண்டும், குறுக்கு வழியில் செல்லக்கூடாது.
நேர்மையான வழியில் தான் மாணவர்கள் செல்ல வேண்டும். என்ன மொழியை கற்க வேண்டும் என ஒவ்வொரு தனி மனிதனும் தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள், ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லாமல் ரயில்வேயை தனியார் மயமாக்கினால் வரவேற்கலாம்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்கினால் பெரிய அளவில் பயன் தரக்கூடியதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.