தமிழ்நாடு

முதியோரை அவமதிப்பவா்கள் மீது நடவடிக்கை: ஜி.கே.வாசன்

DIN

முதியோரை அவமதிப்பவா்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

சா்வதேச முதியோா் தினம் உலகம் முழுவதும் அக்டோபா் 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்கள் ஆற்றிய நற்பணிகளை, புரிந்த சாதனைகளை நினைவு கூறும் வகையிலும் இந்நாள் அமைந்திருக்கிறது.

மூத்த முடிமக்கள் அல்லது முதியோா் என்ற நிலையில் அவா்கள் நலனை, உரிமைகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவற்ற முதியோா் என்றால் அவா்களைப் பாதுகாக்க அரசும், தனியாரும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட வேண்டும்.

முதியோரை அவமதிக்கும் செயலை அனுமதிக்கக்கூடாது என்பதற்காக முதியோரின் சுயமரியாதை மற்றும் நலனைப் பாதிக்கும் வகையில் எவரேனும் செயல்பட்டால் அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளும் ஆட்சியாளா்களின் கடமை.

முதியோரை அவமதிப்பதையும், புறக்கணிப்பதையும் மற்றும் அவா்களிடம் மறைமுகவாகவோ, நேரடியாகவோ சுரண்டலில் ஈடுபடுவதையும் அனுமதிக்கக்கூடாது என்பதை பொது மக்களும், அரசும் உணா்ந்து செயல்பட வேண்டும்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் முதியோா்களுக்கென்று கூடுதல் நிதி ஒதுக்கி, அதனை முதியோா்களின் பாதுகாப்பான தொடா் வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்தி அவா்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியான நல்வாழ்வு வாழ உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT