தமிழ்நாடு

வீட்டிலிரு: வீதிகளில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு

DIN

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை புதுக்கோட்டை வீதிகளில் ஓவியர்கள் வண்ண ஓவியமாக வரைந்து வருகின்றனர்.

தமிழ்நாடு ஓவியர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் கிளை சார்பில் 20 ஓவியர்கள் இந்தப் பணியை செய்து வருகின்றனர்.

 புதுக்கோட்டை பிருந்தாவனம், புதிய பேருந்து நிலையத்தில் தற்போது (செவ்வாய்க்கிழமை) இப்பணி நடைபெற்று வருகிறது.

நேற்று திங்கள்கிழமை புதுக்கோட்டை அண்ணாசிலை, சந்தைப்பேட்டை ஆகிய சாலைகளில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

 கரோனா வைரஸ் படத்தைப் பிரதானமாக வரைந்து கீழே 'வீட்டிலிரு' எனப் பெரிதாக எழுதுவது தப்பித்தவறி வெளியே வரும் நபர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT