ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கரோனா உறுதி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கரோனா உறுதி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. எனினும், தமிழகத்தில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 373 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வக உதவியாளருடன் பணிபுரிந்த 25 ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று வரை சுமார் 22 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.