நன்னிலம்: திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட தேர்வு நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ரகுபதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இறுதியாண்டு மாணவர்களுக்குப் பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின்படி இறுதி பருவத் தேர்வு கண்டிப்பாக நடத்த வேண்டுமென்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே, இறுதியாண்டு மாணவர்களுக்கான இறுதிப் பருவத் தேர்வு கண்டிப்பாக நடைபெறும். இதையடுத்து, இறுதியாண்டு மாணவர்கள் வெற்றி பெறாத பாடங்களுக்கான தேர்வுகளும் நடைபெறும்.
தேர்வு எப்படி, எப்போது நடைபெறும் என சம்பந்தப்பட்ட துறைத் தலைவர்கள் மூலம் தெரிவிக்கப்படும். இதற்கிடையில், ஆன்லைன் தேர்வுகள் எழுத முடியாத மாணவர்கள் கரோனா தொற்று நீங்கி இயல்பு நிலை திரும்பிய பிறகு தேர்வு எழுதலாம் என தெரிவித்துள்ளார்.