சிஐஎஸ்எஃப் அதிகாரியிடம் ஆங்கிலம் அல்லது தமிழில் பேசும்படி கூறியதற்கு, தான் இந்தியரா என்று அந்த அதிகாரி கேட்டதாக திமுக எம்பி கனிமொழி சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"இன்று விமான நிலையத்தில் சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவரிடம், எனக்கு ஹிந்தி தெரியாததால், ஆங்கிலத்தில் அல்லது தமிழில் பேசும்படி கூறினேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியரா என்று கேட்டார். எப்போதிலிருந்து ஹிந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்ற நிலை உருவானது." என்று பதிவிட்டுள்ளார் கனிமொழி.