தமிழ்நாடு

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வுக்கு கரோனா

DIN

மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சரவணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்கள் பலரும் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, தங்களது தொகுதியில் மக்கள் நலப் பணியில் ஈடுபட்டு வரும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலருக்கும் தொற்று ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், மதுரை தெற்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. சரவணனுக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் இதுவரை 31 சட்டப்பேரவை உறுபின்னர்கள் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூர் கடலில் குளிக்கத் தடை

குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை விடுத்த பேரிடர் மேலாண்மை ஆணையம்!

ஜூனில் தங்கலான்!

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: 'கோடீஸ்வர' வேட்பாளர்கள் இத்தனை பேரா..?

வடபழனி முருகன் கோயிலில் தேரோட்டம்!

SCROLL FOR NEXT