தமிழ்நாடு

கரோனா பொதுமுடக்கம்: கிராமசபைக் கூட்டங்கள் ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

DIN


கரோனா பொதுமுடக்கம் காரணமாக, நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,  தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும், சுதந்திர தினம், குடியரசு தினம், உழைப்பாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில், கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். 

இந்நிலையில், கரோனா பொதுமுடக்கம் மற்றும் தொற்று அச்சம் காரணமாக, இந்தாண்டு நாளை சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று நடைபெறவிருந்த கிராமசபைக் கூட்டங்கள் ரத்து​செய்யப்படுவதாகவும், கிராமசபைக் கூட்டங்களுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT