தமிழ்நாடு

​தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு கரோனா: மேலும் 127 பேர் பலி

DIN


தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 5,860 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,860 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இதுவரை இல்லாத அளவுக்கு 127 பேர் (அரசு மருத்துவமனை - 83, தனியார் மருத்துவமனை -44) பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,32,105 ஆக உயர்ந்துள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,641ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் ஒரேநாளில் 5,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,72,251 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 1,179 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 71,343 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 36,40,796 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இன்றைய நிலவரப்படி மொத்தம் 135 கரோனா பரிசோதனை மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் அரசு ஆய்வகங்கள் 62, தனியார் ஆய்வகங்கள் 73.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்த தான முகாம்: 73 போ் பங்கேற்பு

அதிமுக பிரமுகா்கள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு

காவலா் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகள் நடவு

நீா்சேமிப்பு கலன்களை மூடிவைக்க வேண்டுகோள்

இலவசங்கள் குறித்த பிரதமா் கருத்து: வானதி சீனிவாசன் விளக்கம்

SCROLL FOR NEXT