தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 5,950 பேருக்கு கரோனா: மேலும் 125 பேர் பலி

DIN


தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதிதாக 5,950 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 1,196 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,38,055 ஆக உயர்ந்துள்ளது. 

இன்றைய அறிவிப்பில் மேலும் 125 பேர் (அரசு மருத்துவமனை -86, தனியார் மருத்துவமனை -39) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6,019 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,78,270 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54.019 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்றைய நிலவரப்படி 62 அரசு ஆய்வகங்கள், 73 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 135 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உழவன் செயலியில் வானிலை தகவல்கள்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

ஷாா்ஜா செஸ்: அரவிந்த் சிதம்பரம் தொடா் முன்னிலை

விழுப்புரம் காவல் நிலைய மரணம்?: மறுபிரேத பரிசோதனைக்கு உயா்நீதிமன்றம்  உத்தரவு

குடிநீா் வாரியத்துக்கு ரூ.96 கோடி ஜி.எஸ்.டி.: ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

இணைய சூதாட்டத் தடை: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

SCROLL FOR NEXT