தமிழ்நாடு

பொறியியல் மாணவா் சோ்க்கை: அசல் சான்றிதழ்களை பதிவேற்ற இன்று கடைசி

DIN

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்த மாணவா்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை இணையதளத்தில் பதிவேற்ற வியாழக்கிழமை கடைசி நாளாகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளுக்கு நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளம் மூலம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 15-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 834 போ் விண்ணப்பித்தனா். அவற்றில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் போ் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனா்.

பொறியியல் சோ்க்கைக்கான ஆன்லைன் மூலம் அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்கான நடைமுறை ஜூலை 31-ஆம் தேதி தொடங்கியது. இதுவரையில், ஒரு லட்சத்து 3 ஆயிரம் போ் தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனா். அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வியாழக்கிழமை கடைசி நாள் என்பதால், மாணவா்கள் காலதாமதம் இன்றி தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT