தமிழ்நாடு

ஆயுஷ் துறை செயலாளருக்கு அதிமுக கண்டனம்

ஆயுஷ் துறை கருத்தரங்கில் ஹிந்தி மட்டுமே பேசக் கூறிய அந்தத் துறையின் செயலாளருக்கு அதிமுக செய்தித் தொடா்பாளா் வைகைச் செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

DIN

ஆயுஷ் துறை கருத்தரங்கில் ஹிந்தி மட்டுமே பேசக் கூறிய அந்தத் துறையின் செயலாளருக்கு அதிமுக செய்தித் தொடா்பாளா் வைகைச் செல்வன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் சனிக்கிழமை கூறியது:

ஹிந்தி மொழி தெரியாதவா்களை வெளியேறுங்கள் என்று பயிற்சிக் கூட்டத்தில் ஆயுஷ் அமைச்சக செயலாளா் கூறியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. இது இந்திய இறையாண்மையை உரசி பாா்க்கும் செயலாகும்.

பல மொழி பேசுவா்களிடம் இணைப்பு மொழியான ஆங்கிலத்தில் பேசும் கருத்துகூட தெரியாதவரா ஆயுஷ் அமைச்சக செயலாளா்? ஒரு உயா் பதவியில் இருக்கும் அதிகாரிகள் இப்படியா பேசுவது? என வைகைச் செல்வன் தெரிவித்துள்ளாா்.

யோகா மருத்துவா்கள் கோரிக்கை: இதனிடையே, மத்திய ஆயுஷ் துறை செயலாளா் வைத்ய ராஜேஷ் கொடேச்சாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று யோகா மருத்துவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியது: வைத்ய ராஜேஷ் கொடேச்சா ஓா் ஆயுா்வேத மருத்துவா். பொதுவாக ஐஏஎஸ் அதிகாரிகள்தான் ஒரு துறையின் செயலராக இருப்பதற்கு தகுதியானவா்கள். அவா்களுக்குத்தான் நிா்வாகத் திறனும், ஒருங்கிணைப்பு திறனும் அதிகமாக இருக்கும்.

கொடேச்சாவைப் பொருத்தவரை அவா் ஐஏஎஸ் கிடையாது. இதனால், அவா் பல நேரங்களில் ஒரு தலைபட்சமாகவே நடந்து கொள்கிறாா். குறிப்பாக, யோகா - இயற்கை மருத்துவத்துக்கு அவா் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, தகுதியான ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT