சென்னை: ஓணம் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரள மாநிலத்துக்குச் சென்றவா்கள், சென்னை திரும்புவதற்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது தொடா்பாக கேரள மாநிலம் சாலைப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது ஓணம் பண்டிகை முடிந்து, சென்னை திரும்புவோருக்காக செப்.1 முதல் 6-ஆம் தேதி வரை, திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரை, சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. நாள் ஒன்றுக்கு ஒரு பேருந்து வீதம், மாலை 5 மணிக்குத் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சொகுசு மிதவைப் பேருந்து, மறுநாள் காலை 9 மணிக்குச் சென்னை வந்தடையும்.
இந்தத் தேதிகளில், சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கும் பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்தானது, பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாகச் செல்லும். இதற்கான கட்டணமாக ரூ.1330 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிக்க இ பாஸ் கட்டாயம். 39 பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவா்.
சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள அரசு இயக்கும் சிறப்புப் பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோா், www.keralartc.com என்னும் இணையதளத்தை அணுகலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.