தமிழ்நாடு

புரெவி புயல்: தூத்துக்குடி விமான நிலையம் மூடல்

DIN

தூத்துக்குடி: புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியன்று தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுகிறது.

தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலைகொண்டிருந்த புரெவி புயல், குமரிக்கடல் பகுதியை நோக்கி நகர்ந்து வருகிறது.

இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவுக்கு மேல் பாம்பன் - கன்னியாகுமரி இடையே தமிழக கடற்கரையை புரெவி புயல் கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தசமயம் தென் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளியன்று தூத்துக்குடி விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னதாக தூத்துக்குடி வரை செல்லும் இரண்டு ரயில்களை மதுரையுடன் நிறுத்துவதாக தென்னக ரயில்வே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT