தமிழ்நாடு

புதுச்சேரியில் கனமழையால் தெருக்களில் வெள்ளம்: முதல்வர் ஆய்வு

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு நாள்களாக பெய்த கனமழையால் புதுச்சேரி நகர வீதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை வெளியேற்றும் பணிகளை முதல்வர் வே.நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை ஆய்வு செய்தார்.

கடந்த இரண்டு நாள்களாக புதுவை மாநிலம் முழுவதும் தொடர் அதிக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி இருப்பதால் முதல்வர் நாராயணசாமி வெள்ளிக்கிழமை காலை நெல்லித்தோப்பு தொகுதி அண்ணா நகர் பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டுஆய்வு செய்தார்.

காமராஜர் தொகுதி ரெயின்போ நகர், வெங்கட்டா நகர், கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீரில் நடந்து சென்று பார்வையிட்டவர், அதிகாரிகளிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இன்னும் கூடுதலாக மின்மோட்டார் மூலம் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் படி உத்தரவிட்டார். ஏற்கனவே ஒரு சில பகுதிகளில் மின் மோட்டார் மூலம் பணிகள் நடப்பதையும் பார்வையிட்டார். 

புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 124 மி.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வரின் ஆய்வின் போது காமராஜர் சட்டப்பேரவை உறுப்பினர் ஜான் குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT