தமிழ்நாடு

நாமக்கல்லில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம்

DIN

நாமக்கல்: நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

இதனை தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தை எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.டி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். 

இக்கூட்டத்தில்  மக்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும், கட்சியை கொண்டு சேர்ப்பது பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், சுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் புனிதா, நகர பொறுப்பாளர்கள் ஆனந்த் பாலாஜி, பூஜா, அந்தோணி, ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT