நாமக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை கூட்டத்தில் பேசும் மாவட்ட செயலாளர் ஆர்.டி அரங்கண்ணல். 
தமிழ்நாடு

நாமக்கல்லில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம்

நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

DIN

நாமக்கல்: நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்கப்போவதாக வியாழக்கிழமை அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். 

இதனை தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தை எதிரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர்.டி.அரங்கண்ணல் தலைமை வகித்தார். 

இக்கூட்டத்தில்  மக்களிடம் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும், கட்சியை கொண்டு சேர்ப்பது பற்றியும்  ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஆர்.மோகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், சுப்பிரமணியன், மகளிர் அணி செயலாளர் புனிதா, நகர பொறுப்பாளர்கள் ஆனந்த் பாலாஜி, பூஜா, அந்தோணி, ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

புதுதில்லியில் அட‌ர்ந்த‌ ப‌னிமூட்டம் - புகைப்படங்கள்

இலங்கையில் தித்வா புயலால் சீர்குலைந்த பொருளாதாரம்: அவசரகால நிதியாக 20.6 கோடி டாலர் விடுவிப்பு - ஐஎம்எஃப்

டி20 உலகக் கோப்பைக்கான அணியில் ஷுப்மன் கில் சேர்க்கப்படாததன் காரணம் என்ன? அஜித் அகர்கர் விளக்கம்!

SCROLL FOR NEXT