முகப்பு
தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கிய சீர்காழி நகர்ப் பகுதிகள்

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:02 PM
மழை நீர் சூழ்ந்துள்ள குடியிருப்பு பகுதி
பகிர்:

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக பெய்து வரும் கனமழையால் நகரில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது. 

சீர்காழி பகுதியில் தொடர்ந்து இடைவிடாது 3 நாள்களாக கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவாக வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, 20 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.

இதனால் சீர்காழி நகரிலுள்ள பாலசுப்பிரமணியன் நகர், அடையார் நகர், எஸ் கே ஆர் நகர், பாப்பையா நகர், தி நகர் சின்னத்தம்பி நகர், கற்பகம் நகர், கோவிந்தராஜன் நகர் உள்ளிட்ட நகரின் பேல்வேறு பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் 4 அடிக்கு மேல் சூழ்ந்துள்ளது.

இதனால் குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே சென்று வர மிகவும் சிரமப்பட்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை உள்ளது.

தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →