தமிழ்நாடு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.51 அடியை எட்டியது

DIN

மேட்டூர்: மேட்டூர் அணையின் நீர்மட்டம்  102.51 அடியை எட்டியது. 

காவிரி டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், மேட்டூர் அணையின் நீர் மட்டம் சனிக்கிழமை காலை 102.50 கன அடியாக உள்ளது.  அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 6,116 கன அடியிலிருந்து 5,976 கன அடியாக குறைந்துள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. 

கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கன அடி திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 68.13 டி.எம்.சி. யாக இருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் இன்று பாஜக பொதுக்கூட்டம்: பிரதமர் மோடி பங்கேற்பு

ஓடிடியில் ஹாட் ஸ்பாட்!

தமிழகம் போதை கலாசாரமாக மாறி வருவதை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்: தமிழிசை சௌந்தரராஜன்

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

SCROLL FOR NEXT