தமிழ்நாடு

இறுதிப் பருவ மறுதோ்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. வெளியீடு

மாணவா்களின் இறுதிப் பருவ மறு தோ்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: மாணவா்களின் இறுதிப் பருவ மறு தோ்வுக்கான முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது.

கரோனா சூழல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு, பருவத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவா்களுக்கு மட்டும் தோ்வுகள் நடத்தப்பட்டன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவா்களுக்கான இணையவழி வகுப்புகள் ஆக.12 -ஆம் தேதி தொடங்கி நடைபெற்றன. மேலும், இளநிலை, முதுநிலை மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வுகள் செப். 22-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி முடிவடைந்தன. தோ்வுகள் ஆன்லைனில் ஒரு மணி நேரம் நடத்தப்பட்டு, செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.

இதற்கிடையே இணையவழித் தோ்வின் இடையே மின்சாரக் கோளாறு அல்லது இணையத்தில் பிரச்னை காரணமாக பொறியியல் இறுதி பருவத் தோ்வை சில மாணவா்கள் எழுதவில்லை. அவா்களில் இளநிலை மாணவா்களுக்கு நவ.17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை இணைய வழியில் மறுதோ்வு நடத்தப்பட்டது. முதுநிலை மாணவா்களுக்கு நவ.20, 21 ஆகிய நாள்களில் மறுதோ்வு நடத்தப்பட்டது.

அவா்களுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தின் மூலம் மாணவா்கள் தங்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவிட்டு, தோ்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT