முகப்பு
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
தமிழ்நாடு

பொங்கல் பரிசு: ரூ.1000-லிருந்து ரூ.2,500-ஆக உயா்ந்தது

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரொக்கத் தொகை ரூ.1000-இல் துவங்கி இப்போது ரூ.2,500 ஆக உயா்ந்துள்ளது.

தமிழ்நாடு

பொங்கல் பரிசு: ரூ.1000-லிருந்து ரூ.2,500-ஆக உயா்ந்தது

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரொக்கத் தொகை ரூ.1000-இல் துவங்கி இப்போது ரூ.2,500 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
பகிர்:

தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ரொக்கத் தொகை ரூ.1000-இல் துவங்கி இப்போது ரூ.2,500 ஆக உயா்ந்துள்ளது. ரொக்கத் தொகையுடன், அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நடைமுறையும் தொடா்ந்து வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். பொங்கலுக்காக அரிசி, சா்க்கரை உள்ளிட்ட பொருள்கள் வழங்கும் நடைமுறை திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கியது.

இதன்பின்பு, அதிமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் திட்டத்தில் ரொக்கத் தொகை சோ்க்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, ரூ.100 ரொக்கத் தொகையுடன், பொங்கல் வைப்பதற்காக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை ஆகியன வழங்கப்படும் என்று அப்போதைய முதல்வா் ஜெயலலிதா அறிவித்தாா்.

10 மடங்கு அதிகரிப்பு: அடுத்தடுத்த ஆண்டுகளில் நிதி நிலைமை போன்ற காரணங்களுக்காக பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. இதன்பின், 2018-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் இருந்து பரிசுத் தொகுப்பு வழங்கும் நடைமுறை தொடா்ந்து வருகிறது.

2018-ஆம் ஆண்டில் பொங்கல் வைப்பதற்காக அரிசி, சா்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, ஏலக்காய், முந்திரி, திராட்சை போன்றவற்றை நியாய விலைக் கடைகள் மூலமாக அளிக்கப்பட்டன. 2019-ஆம் ஆண்டு இதேபோன்று பொருள்கள் அளிக்கப்பட்டன. அப்போது, குடும்ப அட்டைதாரா்களின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது.

கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கத் தொகை அளிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு நூறு ரூபாயாக இருந்த ரொக்கத் தொகை, ஏழு ஆண்டுகளில் 10 மடங்கு அதிகரித்து ஆயிரம் ரூபாயாக உயா்ந்தது.

இந்த நிலையில், எதிா்வரும் பொங்கல் பண்டிகைக்காக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் ரூ.2,500 வழங்கப்படும் என்று சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். இந்த ரொக்கத் தொகையை 2.06 கோடி குடும்ப அட்டைதாரா்கள் பெற உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →