வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்: கமல்
வருமான வரி செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்
சென்னை: வருமான வரி செலுத்தியது தொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும் என்று மநீம தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் கூறியதாவது:
வருமான வரி செலுத்தியது தொடர்பாக என்னிடம் வெள்ளை அறிக்கை கேட்கின்றனர். அதுதொடர்பாக வருமான வரித்துறைதான் என்னிடம் கேள்வி கேட்க வேண்டும்.
திமுகவும் அதிமுகவும் மாறி ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி தேர்தல் பிரசார களத்தில் எனது பணியினை சுலபமாக்கி விட்டனர்.
நாம் இனிமேல் ஊழல்வாதிகளை பதவியில் அமரவிடக்கூடாது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.