லண்டனில் இருந்து மதுரை வந்தவருக்கு கரோனா உறுதி
லண்டனில் இருந்து மதுரை வந்த 96 பயணிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை: லண்டனில் இருந்து மதுரை வந்த 96 பயணிகளில் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லண்டனில் இருந்து மதுரை வந்த 96 பயணிகளை சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்தனர். 29 பேருக்கு தொற்று அறிகுறி இருந்த நிலையில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தவிட்டுசந்தையை சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.