தமிழ்நாடு

திருவடிசூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

DIN


செங்கல்பட்டு: திருவடி சூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலம் ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி யையொட்டி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருவடி சூலத்தில் ஏழுமலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள ஸ்ரீ வாரு வெங்கடேச பெருமாள் கோவிலில் உள்ள 108 திவ்ய தேசங்களில் அமைந்துள்ள ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீ ரங்கநாதர் சன்னதியில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. 

ஸ்ரீ ரங்கநாதர் சொர்க்கவாசல் வழியாக மஹா தீபாராதனையுடன் காட்சியளித்தார். சொர்க்கவாசல் தரிசனத்திற்காக காத்திருந்த பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்தனர். அன்னதானமும், பிரசாதமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் மதுரை முத்து சுவாமிகள் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

மதுராந்தகம் அருகே சிறுக்கரணையில் பெருங்கற்கால கல் வட்டங்கள்!

சா்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி’ ஜாா்ஜியா மசோதா: ‘வீட்டோ’வை பயன்படுத்தி ரத்து செய்தாா் அதிபா்

கா்நாடகத்தில் இருந்து போதைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT