முகப்பு
மாணவர் ரியாஸ்தீன்
தமிழ்நாடு

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவருக்கு முதல்வர் பாராட்டு

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவர் ரியஸ்தீனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவருக்கு முதல்வர் பாராட்டு

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவர் ரியஸ்தீனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
மாணவர் ரியாஸ்தீன்
பகிர்:

உலகின் எடை குறைந்த செயற்கைக்கோளை வடிவமைத்த தஞ்சை மாணவர் ரியஸ்தீனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் எஸ். ரியாஸ்தீன் (18). இவா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.டெக். மெக்கட்ரானிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா். இவா் வடிவமைத்துள்ள உலகின் எடை குறைந்த சிறிய செயற்கைக்கோள் 2021- ஆம் ஆண்டில் நாசா விண்வெளித் தளத்திலிருந்து ஏவப்பட உள்ளது.

இந்நிலையில் மாணவர் ரியாஸ்தீனுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 

உலகின் எடை குறைந்த செயற்கைக் கோளை வடிவமைத்து சாதனை புரிந்து தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள தஞ்சையை சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் அவர்களுக்கு எனது வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! இதனை நாசா 2021-ல் விண்ணில் ஏவ இருப்பது கூடுதல் பெருமிதமும், மகிழ்ச்சியும் அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →