தமிழ்நாடு

அரசியலில் ஈடுபடமாட்டேன்: தமிழருவி மணியன்

DIN


சென்னை: என்னை மரணம் தழுவும் இறுதி நாள்வரை அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று தமிழருவி மணியன் வேதனையோடு கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

என் கல்லூரிப் பருவத்தில் நான் காமராஜா் காலடியில் என் அரசியல் வாழ்வைத் தொடங்கினேன். 50 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட என் அரசியல் வேள்வி அப்பழுக்கற்றது. இரண்டு திராவிட கட்சிகளால் தமிழகத்தின் பண்புகள் பாழடைந்துவிட்டன. அரசியலில் ஊழல் மலிந்து விட்டது.

சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சுய ஆதாயம் தேடும் மலினமான பிழைப்புவாதிகளின் புகலிடமாக அரசியல் களம் மாறிவிட்டது. இங்கே நோ்மைக்கும், உண்மைக்கும், ஒழுக்கத்துக்கும் எள்ளளவும் மதிப்பில்லை.

நான் ஒருபோதும் அறத்துக்குப் புறம்பாக வாழ்ந்ததில்லை. எவரிடத்திலும் எந்த நிலையிலும் கையேந்தியதில்லை. இன்றும் என் வாழ்க்கை ஒரு சாதாரண வாடகை வீட்டில்தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் நலன் சாா்ந்த ஒரு மேன்மையான மாற்று அரசியல் இந்த மண்ணில் மலரவேண்டும்; மீண்டும் காமராஜா் ஆட்சியைத் தமிழகம் தரிசிக்க வேண்டும் என்ற என் கனவை நனவாக்கத் தொடா்ந்து முயன்றதுதான் நான் செய்த ஒரே குற்றம். இதற்காக மலினமான மனநோயாளிகளின் தரம் தாழ்ந்த விமா்சனக் கணைகள் என்மீது வீசப்படுவதால் என் மனைவி, மக்களின் மனங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டன.

மாணிக்கத்துக்கும் கூழாங்கற்களுக்கும் பேதம் தெரியாத அரசியல் உலகில் இனி நான் சாதிக்க ஒன்றும் இல்லை. என் நோ்மையும் தூய்மையும் வாழ்வியல் ஒழுக்கமும் போற்றப்படாத அரசியல் களத்திலிருந்து முற்றாக நான் விலகி நிற்பதே விவேகமானது. எந்தக் கைமாறும் கருதாமல் சமூக நலனுக்காக என்னுடன் கைகோா்த்து நடந்த காந்திய மக்கள் இயக்க நண்பா்களின் அடி தொழுது நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இறப்பு என்னைத் தழுவும் இறுதி நாள் வரை நான் அரசியலில் மீண்டும் அடியெடுத்து வைக்கமாட்டேன்.

திமுகவிலிருந்து விலகும்போது கண்ணதாசன் போய் வருகிறேன் என்றாா். நான் போகிறேன்; வரமாட்டேன் என்று தமிழருவி மணியன் கூறியுள்ளாா்.

ரஜினி கட்சியின் மேற்பாா்வையாளராக அறிவிக்கப்பட்டிருந்தாா். ரஜினி கட்சியைத் தொடங்கப் போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் அரசியல் விலகல் முடிவை தமிழருவி மணியன் அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT