தமிழ்நாடு

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் திருவாதிரை விழா

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் கோவிலில் புதன்கிழமை திருவாதிரை விழாவை முன்னிட்டு நடராஜர் சுவாமி ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. 

இவ் விழாவையொட்டி மூலவர் நடராஜப் பெருமானுக்கு சந்தனம் கலையப்பட்டு பின்னர் மூலவருக்கும் உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் நடராஜருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மூலவர் சன்னதியில் சிவகாமி சமேத உற்சவமூர்த்திக்கும் அபிஷேகம் நடத்தி மலர் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் அலங்கார தீபாரதனைகள்  நடைபெற்றது. 

அதன்பின் உற்சவர் நடராஜர் சுவாமி கோவில் உள்பிரகாரத்தை மூன்றுமுறை வலம் வந்து கோவில் மண்டபம் சென்றடைந்தார். 

திருவாதிரை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நடராஜரை தரிசனம் செய்தனர். 

கோவில் பரம்ரை ஸ்தானீகம் சக்கரைப்பட்டர் மற்றும் ராஜேஸ் பட்டர்,குமார் பட்டர் ஆகியோர் சுவாமிக்கான பூஜைகளை நடத்தி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT