தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக மழை: 40 மில்லி மீட்டர் பதிவு

DIN



விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய மழை, வியாழக்கிழமை காலை வரை பரவலாக பெய்து வருகிறது.

மாவட்டத்தில் ஏற்கனவே நிரவி மற்றும் புரெவி புயல் காரணமாக பரவலாக மழை பெய்து ஏரி, நீர்நிலைகள் 60% நிரம்பியுள்ள நிலையில் மீண்டும் தற்போது மழை பெய்ய தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் புதன்கிழமை இரவு தொடங்கி காலை வரை பெய்த மழையில் 40 மில்லி மீட்டர் சராசரியாக பதிவானது.

மரக்காணத்தில் அதிக அளவாக 60 மில்லி மீட்டரும், விழுப்புரம் 36 மில்லி மீட்டர், வளவனூர் 37, திண்டிவனம் 69, மரக்காணம் 60, செஞ்சி 60, வளத்தி 68, முகையூர் 39, திருவெண்ணநல்லூர் 20 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

தொடர்ந்து வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT