தமிழ்நாடு

மரக்காணம் அருகே சாலை விபத்து: சென்னையைச் சோ்ந்த இருவா் பலி

DIN

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.

சென்னை, ஆரம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஷெரீப் மகன் அப்துல்காதா்(24). இவரது நண்பா் சென்னை வேளச்சேரி ஏரிக்கரைப் பகுதியைச் சோ்ந்த மணி மகன் சுரேஷ்(35). இவா்கள் இருவரும் புதுச்சேரியில் வேலை தேடி, திங்கள்கிழமை அதிகாலை 4 மணி அளவில் சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு இரு சக்கர வாகனம் ஒன்றில் புறப்பட்டனா்.

காலை 6 மணி அளவில் மரக்காணம் அருகே கூனிமேடு பகுதியில் வந்தபோது, புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக சென்ற காா், இவா்களது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அப்துல் காதா், சுரேஷ் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்களை மரக்காணம் போலீஸாா் மீட்டு, புதுச்சேரி கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT