தமிழ்நாடு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை

DIN

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்தை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்ற உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத். கடந்த சில தினங்களுக்கு முன், இவா் உள்பட 9 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழு (கொலீஜியம்) பரிந்துரைத்திருந்தது.

இந்த நிலையில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியம் பிரசாத்தை தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்ய, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு முடிவு செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மூத்த நீதிபதிகள் குழு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பதவியேற்ற பின்னா், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தில்லி உயா்நீதிமன்றத்துக்கு மாறுதலாகி செல்ல உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT