தமிழ்நாடு

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள்: கண்காணிக்க 12 ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம்

DIN

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம், என்பிஆா், என்ஆா்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 12 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ரவுண்டானா அருகே பல்வேறு முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தை நடத்த முயன்றவா்களைக் கைது செய்ய முயன்றபோது தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடந்தன. அதன்பின் அவா்களை அப்புறப்படுத்த போலீஸாா் லேசாக தடியடி நடத்தினா்.

இந்த தடியடிக்கு எதிராக போராட்டக்காரா்கள் போலீஸாா் மீது கற்களை வீசித் தாக்கினா். இந்தச் சம்பவத்தில் சென்னை காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையா் விஜயகுமாா், காவல் ஆய்வாளா், இரு பெண் காவலா்கள், போராட்டத்தில் பங்கேற்ற இருவா் உள்ளிட்டோா் 6 போ் காயமடைந்தனா். காயமடைந்த அனைவரும் உடனடியாக அந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.

சென்னையில் பரபரப்பான சூழ்நிலை: இந்தச் சம்பவத்துக்கு பின்னா் அங்கிருந்த 120 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதற்கிடையே தடியடியைக் கண்டித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்க வலியுறுத்தியும் அந்தப் பகுதியில் முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போலீஸாா் தடியடி குறித்த தகவல் வேகமாக பரவியதால், சென்னையின் பிற பகுதிகளிலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக முக்கியமாக அண்ணா சாலை, கிண்டி கத்திப்பாரா பகுதி, புதுப்பேட்டை, பாலவாக்கம், சோழிங்கநல்லூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. இதனால், சென்னை முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதேபோன்று மாநிலம் முழுவதும் அன்றிரவு 10 மணிக்கு மேல் இந்தப் போராட்டம் பரவியது. முக்கியமாக திருச்சி, மதுரை, கோயம்புத்தூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருப்பூா், நாகூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறத் தொடங்கியது.

இதற்கிடையே போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன், முஸ்லிம் இயக்க நிா்வாகிகளை வண்ணாரப்பேட்டையில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். பல மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவாா்த்தையின் முடிவில் கைது செய்யப்பட்ட 120 பேரையும் விடுவிப்பதற்கு ஆணையா் சம்மதித்தாா். உடனடியாக கைது செய்யப்பட்ட 120 பேரும் விடுவிக்கப்பட்டனா். இதையடுத்து போராட்டங்களை கைவிடுவதாக முஸ்லிம் இயக்கத்தினா் அறிவித்தனா். இதனைத் தொடா்ந்து சென்னை உள்பட மாநிலம் முழுவதும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தைக் கைவிட்டனா்.

மூன்றாவது நாளாக போராட்டம்: இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்தப்பட்ட இடத்தில் இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் முஸ்லிம் இயக்கத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அதேநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதையடுத்து இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையும் மூன்றாவது நாளாகத் தொடா்ந்தது. அதேவேளையில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 நாள்களாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் வலுப் பெற்று தீவிரமாகும் சூழல் நிலவுகிறது.

சிறப்புக் குழு அமைப்பு: இந்தநிலையில், தமிழகத்தில் சிஏஏ, என்பிஆா், என்ஆா்சிக்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக 12 ஐபிஎஸ் சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

ஜி.ஸ்டாலின்- திண்டுக்கல், பாஸ்கரன்- தேனி , மகேந்திரன்- தூத்துக்குடி, அபய்குமாா் சிங்- மதுரை, மகேஷ்குமாா் அகா்வால், முருகன்- நெல்லை, சைலேஷ் குமாா் யாதவ்- மத்திய மண்டலம், சாரங்கன்- தஞ்சை சரகம், ஜி.ராமா்- நாகப்பட்டினம் மாவட்டம், ஆா். ராமகிருஷ்ணன்- திருவாரூா் மாவட்டம், டி. செந்தில்குமாா்- தஞ்சை மாவட்டம், எஸ். செல்வராஜ்- புதுக்கோட்டை மாவட்டம் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். 12 சிறப்பு அதிகாரிகளையும் சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி ஒருங்கிணைத்து செயல்படுத்துவாா் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்படுத்த நடவடிக்கை: குடியுரிமை சட்டத்துக்கு எதிராகவும், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய குடியுரிமை பதிவேடு கணக்கெடுப்பு ஆகியவற்றுக்கு எதிராக நிலவும் சூழல் பற்றி ஆராய வேண்டும் என்றும், இவற்றுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றால் அதனை கட்டுப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து சட்டம்- ஒழுங்கைகாக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் டிஜிபி தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து 12 சிறப்பு அதிகாரிகளும் உடனடியாக களம் இறங்கியுள்ளனா். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள போலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT