ஸ்டாலின் 
தமிழ்நாடு

தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகள்: ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழக அரசு தொடர்ந்த மூன்று அவதூறு வழக்குகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு, முதலமைச்சர் பழனிசாமி மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி ஆகியோர் குறித்தும், மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் விமர்சித்து கருத்துகள் தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. தொடர்ந்து குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக தமிழக அரசை விமர்சித்ததாகவும், ஸ்டாலினுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் திங்களன்று விசாரித்தார். அப்போது முதலமைச்சரை விமர்சித்தது மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பான வழக்குகளில் மார்ச் 4ம் தேதியும், உள்ளாட்சி துறை அமைச்சரை விமர்சித்தது தொடர்பான வழக்கில் பிப்ரவரி 24ம் தேதியும் ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT