தஞ்சாவூர்: சிங்கப்பூரிலிருந்து திரும்பிய மன்னார்குடி இளைஞருக்கு காய்ச்சல் இருந்ததால், கரோனா வைரஸா என்ற சந்தேகத்துடன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மன்னார்குடியை சேர்ந்த இளைஞர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். அண்மையில் மன்னார்குடிக்கு திரும்பிய அவருக்குத் தொண்டை வலி, காய்ச்சல் இருந்து வந்தது. எனவே, அவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் கரோனா வைரஸ் பாதிப்பா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தனி வார்டில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், கரோனா வைரஸ் பாதிப்பு ஏதுமில்லை எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் படிக்க.. தமிழகத்தில் கரோனா? புதுக்கோட்டையில் ஒருவர் பலி
ஏற்கனவே, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சீனா சென்று திரும்பிய நிலையில் திடீரென மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.