தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72ஆவது பிறந்தநாள் விழா ஈரோடு மாவட்டம் பன்னீர்செல்வம் அருகில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
ஜெயயலலிதா உருவப்படத்துக்கு மாநகர் மாவட்ட கழகச் செயலரும், மேற்கு தொகுதி எம்எல்ஏவுமான கே.வி.இராமலிங்கம், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ தென்னரசு, மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் சிவசுப்ரமணியம், முன்னாள் அமைச்சர் பி.சி.இராமசாமி, முன்னாள் மாநகராட்சி துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, முன்னாள் மண்டலத் தலைவர்கள் மனோகரன் மற்றும் கேசவமூர்த்தி, பகுதி கழகச் செயலர்கள் கோவிந்தராஜ், முருக சேகர் மற்றும் ஜெகதீஷ், மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலர் வீரகுமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலர் நந்தகோபால், ஒன்றியச் செயலர் பூவேந்தன், மொடக்குறிச்சி ஒன்றியச் செயலர் கதிர்வேல்
உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு சூரம்பட்டிவலசில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 72ஆவது பிறந்த நாளையொட்டி மாவட்ட மாணவரணி சார்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. விழா ஏற்பாட்டினை மாவட்ட மாணவரணிச் செயலர் ரத்தன் பிரதீப் செய்திருந்தார்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் பெரியார் நகர் பகுதி கழகம் சார்பில் மனோகரன் தலைமையில் எம்எல்ஏக்கள் ரத்த தானம் செய்தனர்.
ஈரோடு பெரியசேமூர் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையத்தில் அம்மா மக்கள் சேவை மையத்தில் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலர் நந்தகோபால் தலைமையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.