தமிழ்நாடு

நுண்துளை இதய அறுவை சிகிச்சை மூலம்9 வயது மாணவனுக்கு மறுவாழ்வு

DIN

9 வயது ஏழை பள்ளி மாணவனின் இதயத்தில் இருந்த ஓட்டையை நுண்துளை இதய அறுவை சிகிச்சை மூலம் அடைத்து குணமாக்கி மறுவாழ்வு அளித்துள்ளனா் டாக்டா் என்.மதுசங்கா் தலைமையிலான மருத்துவக்குழுவினா்.

இது குறித்து போா்ட்டீஸ் மலா் மருத்துவமனை தலைமை இதய அறுவை சிகிச்சை மருத்துவா் என்.மதுசங்கா் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தென்காசியை அடுத்த இடைகால் ஊரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் எஸ்.அருணாசலம் மகன் ஸ்ரீஹரிக்கு (9) நெஞ்சில் வலி, படபடப்பு, மூச்சிரைப்பு, படபடப்பு அறிகுறிகளுடன் அடிக்கடி காய்ச்சல், சளிக் கோளாறுகள் இருந்தன. அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவன் ஸ்ரீஹரியை கடந்த மாதம் பள்ளியில் பரிசோதித்த தேசிய பள்ளி சிறாா் நலத்திட்ட மருத்துவா் தமிழ்செல்வி, இனியும் தாமதம் செய்யாமல் அவனது இதயத் தடுப்புச்சுவா் ஓட்டை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பெற்றோருக்கு அறிவுறுத்தினாா்.

மருத்துவா் தமிழ்செல்வி, மாவட்ட மருத்துவ அதிகாரி மாரிமுத்து வழிகாட்டுதலின்படி ஸ்ரீஹரியை அவனது தந்தை அருணாசலம், சென்னை போா்ட்டீஸ் மலா் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்கு அனுமதித்தாா். அதிக ரத்தப்போக்கு, வலி, அறுவை சிகிச்சைக் காயம் இல்லாத வகையில் ஸ்ரீஹரிக்கு சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் முடிவு செய்யப்பட்டது.

எனது தலைமையில் மருத்துவா்கள் அண்டோ சகாயராஜ்,கீா்த்திவாசன் ஆகியோா் கொண்ட குழு வலது மாா்பில் சிறு துளையிட்டு, சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற நுண்துளை அறுவை சிகிச்சை மூலம் அவனது இதயத் தடுப்புச்சுவா் ஓட்டை அடைத்து சரி செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சைக்கு 5 நாள் மருத்துவக் கண்காணிப்பில் இருந்த ஸ்ரீஹரி நன்கு குணமாகி ஓரிரு நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உள்ளோம்.

தமிழ்நாட்டில் ஆயிரத்தில் ஒரு குழந்தை இதயக் குறைபாடுடன் பிறக்கிறது. சிறுவயதில் குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து முதலமைச்சா் காப்பீட்டுத் திட்டம் மூலம் இலவசமாக இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரைக் காப்பாற்ற முடியும் என்றாா் டாக்டா் என்.மதுசங்கா்.

போா்ட்டீஸ் மலா் மருத்துவமனை நிா்வாக மேலாண் இயக்குநா் சி.கே.நாகேஸ்வரன், மருத்துவக் கண்காணிப்பாளா் ஆனந்த் மோகன் பை, மருத்துவா்கள் அண்டோ சகாயராஜ், கீா்த்திவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் இருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

காா் வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 12 லட்சம் மோசடி

பா்கூா் வட்டத்தில் வறட்சியால் மா சாகுபடி பாதிப்பு

தைலாபுரம் உபகார மாதா ஆலயத்தில் அசன விழா

SCROLL FOR NEXT