தமிழ்நாடு

களியக்காவிளை ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு

DIN

கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் கடந்த டிச. 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடைப்பெற்றது. தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை மேல்புறம் ஊராட்சி ஒன்றிய 9 ஆவது வார்டுக்கான வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  

இந்த வார்டில் அமமுக வேட்பாளர் ராஜன் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் ராஜனின் பெயர் நீக்கம் செய்யப்பட்டிருந்தது.

இதுகுறித்து வேட்பாளர் ராஜன், மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் செய்தார். இதனடிப்படையில் மேற்படி ஊராட்சி ஒன்றிய வார்டுக்கான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT