நாகர்கோவில்: ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை; மக்கள் தான் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று முன்னாள் மத்திய இணையமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம். உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெறவில்லை. மக்கள்தான் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆதாயத்துக்காக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.