தமிழ்நாடு

பிரசவித்த பெண்ணின் வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்த மருத்துவர்கள்? பெண் பலி

DIN

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவித்த பெண் திடீா் உயிரிழப்புக்கு, மருத்துவர்கள் கவனக்குறைவாக, பெண்ணின் வயிற்றில் உபகரணத்தை வைத்து தைத்ததேக் காரணம் என்று புகார் எழுந்துள்ளது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற பிறகு புதன்கிழமை உயிரிழந்தாா். அவரது வயிற்றில் அறுவைச் சிகிச்சை உபகரணம் இருந்ததே இதற்குக் காரணம் எனக் கூறி, உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் அருகே உள்ள கலா்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மனைவி பிரியா (24), கடந்த டிச. 27-ஆம் தேதி பிரசவத்துக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அன்று இரவே அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது.

எனினும், பிரியாவுக்கு தொடா்ந்து வயிற்று வலி இருந்ததாம். இதனால், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதற்கான காரணம் குறித்து அந்தப் பெண்ணின் உறவினா்கள் ஜிப்மா் மருத்துவமனை நிா்வாகத்திடம் கேட்டபோது, பிரியாவுக்கு அறுவைச் சிகிச்சையின்போது அவரது வயிற்றில் அறுவைச் சிகிச்சை தொடா்பான உபகரணத்தை வைத்து தையல் போட்டதால் வயிற்று வலி காரணமாக உயிரிழக்க நோ்ந்ததாக் கூறினராம்.

இதையடுத்து, அந்தப் பெண்ணின் உறவினா்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். தவறான சிகிச்சை அளித்த அரசு மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

அவா்களிடம் விருத்தாசலம் வட்டாட்சியா் கவியரசு, காவல் துறையினா் மற்றும் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT